isis இனரால் ஈராக் மற்றும் சிரியா பகுதிகளில் கைப்பற்றப்பட்ட எல்லைகளை அடிப்படையாக கொண்டுஅந்தபகுதிகளுக்கு ISLAMIC STATE (IS) எனபெயரிட்டு தாங்களாகவே அந்த நாட்டிற்கான கலிபாவினைஅறிவித்திருந்தனர் .
அதையடுத்து தங்களுக்கான நானயத்தினையும் அறிவிப்பு செய்தனர்
.இவ்வாறு அவர்களுடைய நடவடிக்கைகள் மூலம் புதிய நாட்டினை நோக்கி நகர்த்தி செல்கின்றனர் ..
அந்த வகையில் நேற்று........... ஆளுகைக்குள் உட்பட்டவர்களுக்கு புதிதான அடையாள அட்டையினை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது . நேற்று twitter தளத்தில் இந்த புதிய அடையாள அட்டையின் படம் ஒன்று வெளியாகியுள்ளது .
அந்த படத்தில் காணப்படும் அடையாள அட்டையின் பின்புறத்தில் الدولة الإسلامية (அத்தவ்ளத்துள் இஸ்லாமியா - இஸ்லாமிய நாடு ) என்று பெரிதாக பெயர் பொறிக்கப்பட்டும் அதன் ஓரத்தில் பெயர் மற்றும் வழங்கப்பட திகதி மேலும் ப்ளட் க்ருப் +B என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும் இந்த அட்டை
முப்பரிமாணம் கொண்டதாகவும் "சிப்" இணைக்கப் பட்டதுள்ளதாகவும் கூறப்படுகிறது . இவை பின் அட்டையின் தோற்றமாக இருந்தாலும் முன் அட்டையின் தோற்றம் எவ்வாறு என்ற தகவல் பெறப்படவில்லை .மேலும் இவ்வாறு வெளியான இந்த அடையாளத்தை படத்தின் நம்பகத்தன்மை இதுவரை யாராலும் உறுதி செய்யப்படவும் இல்லை ஆய்வுக்குட்படுத்தவும் இல்லை என்பது குறிப்படத்தக்கது .

0 comments:
Post a Comment